அரசு புகைப்படக் கண்காட்சி நிறைவு

அரசு புகைப்படக் கண்காட்சி நிறைவு
நிறைவு விழா 
மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற அரசு புகைப்படக் கண்காட்சி நிறைவு பெற்றது.
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக கடந்த 29ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாள் புகைப்பட கண்காட்சியானது நேற்று மதியம் நிறைவு பெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் நாயர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி ஊட்டச்சத்து குறித்து கருத்துரை வழங்கினார். மாணர்வகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களிலும் ‌ பல்வேறு கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story