அரசு பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனம் திருட்டு

அரசு பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனம் திருட்டு

திருட்டு

தர்மபுரி நகர பகுதியில் அரசு பள்ளி ஆசிரியரின் இருசக்கர வாகனம் திருட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளம் எதிரே, சகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி,இவர் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்ற பெரியசாமி, தனது சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின்னர், மீண்டும் வந்த போது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதுபற்றி அவர் நேற்று மாலை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story