அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


திண்டுக்கல் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.


திண்டுக்கல் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

திண்டுக்கல் நாயுடு மகாலில் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 708 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 2,543 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக து.பொது செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வழங்கினார்.

இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, திண்டுக்கல் வருவாய் மாவட்ட கோட்டாட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், து.மேயர்.ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story