நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து - பயணிகள் அவதி !!

நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து - பயணிகள் அவதி !!

அரசு பேருந்து

திருப்புவனத்தில் மதிய வேளையில் நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.

திருப்புவனத்தில் மதிய வேளையில் நடுரோட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக மானாமதுரை, பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் கிளை பணிமனைகளுக்கு மஞ்சள் நிற புதிய பஸ் வழங்கப்பட்டது.பல பஸ்களில் தானியங்கி கதவுகளில் உள்ள ரப்பர் இணைப்பு சேதமடைந்து விட்டன. தானியங்கி கதவுகளும் சரிவர திறப்பதில்லை.

இந்நிலையில் மானாமதுரையில் இருந்து மதுரை சென்ற புதிய மஞ்சள் நிற பஸ்சின் டயர் திருப்புவனம் வரும் போது பஞ்சரானது.டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு பயணிகளை அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

திருப்புவனம் நகருக்குள் பஸ்கள் பெரும்பாலும் வருவது இல்லை என்பதால் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்து கிடந்தனர்.

Tags

Next Story