ஆற்காட்டில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போலீஸ் விசாரணை

ஆற்காட்டில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: போலீஸ் விசாரணை

காவல் நிலையம்

ஆற்காட்டில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. சோளிங்கர் ஒன்றியம் விண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஐசக் (28) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். சரவணன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.

ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு மாசா பேட்டை கண்ண மங்கலம் கூட்ரோடு அருகே பஸ் வந்தபோது மாசாபேட்டையை சேர்ந்த சதீஷ் என்ற ஆட்டோ டிரைவர் குடி போதையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தார். அவர் மீது பஸ் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தி உள்ளார். உடனே சதீஷ் அங்கிருந்த கல்லை எடுத்து பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது வீசி உள்ளார். இதில் கண்ணாடி உடைந்தது.

இதனால் பஸ்சில் இருந்த யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பஸ் கண்டக்டர் சரவணன் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story