அரசு பஸ் - வேன் மோதல் : 8 பக்தர்கள் காயம்

அரசு பஸ் - வேன் மோதல் : 8 பக்தர்கள் காயம்

சாலை விபத்து 

ஒங்கூரில் பக்தர்களை ஏற்றி வந்த வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா இரவாரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் மணிகண்டன் (21) டிரைவர். இவர் கும்பகோணத்தில் இருந்து 21 பக்தர்களை ஏற்றிக்கொண்டு மேல்மருவத்தூர் கோவிலுக்கு வேனில் புறப்பட்டார். பின்னர், அங் கிருந்து மீண்டும் கும்பகோணத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஓங்கூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண் டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக வேனின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த திருவாரூர் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (59), பத்மா (53), சரோஜா (55), வள்ளி (43), வனஜா (40), வளர்மதி (60), உஷா (52), பஸ்சில் பயணம் செய்த ஆண்டாள் (60) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story