டிரைவர் முருகன் குடும்பத்திற்கு அரசு வேலை - உயர்நீதிமன்றம்

டிரைவர் முருகன் குடும்பத்திற்கு அரசு வேலை - உயர்நீதிமன்றம்
பைல் படம் 
சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த டிரைவர் முருகன் குடுமபத்தினருக்கு அரசு வேலை வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உததரவிட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீஸ் விசாரணையின் போது வேன் டிரைவர் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதனிடையே வேன் டிரைவர் இறந்ததற்கு இழப்பீடு மற்றும் வேலை வழங்க கோரி முருகனின் மனைவி மீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓட்டுநரின் மனைவி மீனா தொடர்ந்த வழக்கில் அங்கன்வாடியில் பணி வழங்க தென்காசி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து டிரைவர் முருகன் உடல்18 நாள் பிறகு நேற்று அவர் சொந்த ஊரான வடக்கு புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story