நகர அமைப்பு ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

நகர அமைப்பு ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை

பணி நீக்கம் செய்யப்பட்ட நகர அமைப்பு ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டார்.

மேட்டுப்பாளையம் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் அறிவுடை நம்பி.இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அறிவுடை நம்பி நீலகிரி மாவட்டம் நெல்லியாலா நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் வேலையின்றி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது மனைவி பள்ளிக்குச் சென்று விடவே அறிவுடை நம்பி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.மாலை வீடு திரும்பிய அவரது மனைவி வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்ததால் அதனை திறக்க முயற்சித்துள்ளார்.உள்ளே சென்று பார்த்தபோது அறிவுடை நம்பி படுக்கையறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டதை கண்ட அதிர்ச்சி அடைந்தவர் அருகில் வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த அறுவடை நம்பி கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அடியே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story