கடலில் மாயமான தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரணம்

கடலில் மாயமான தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரணம்
கடலில் மாயமான ஜலாலுதீன்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்ற தொழிலாளி கடலில் விழுந்து மாயமான நிலையில் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 14.01.2024 அன்று விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் விசைப்படகில் சமையல் பணிக்காகச் சென்ற கிள்ளியூர் வட்டம், தேங்காப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த அபுபக்கர் மகன் ஜலாலுதீன் ( 38) என்பவர் கடந்த 21.01.2024 அன்று காலை 5.30 மணியளவில் கன்னியாகுமரி கடலில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் விசைப்படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்தார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள ஜலாலுதீன் என்பவரது குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story