பேராவூரணி அருகே அரசுப்பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பழனிவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி நா.பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.நந்தினி மற்றும் கல்விப் புரவலர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் க.நீலகண்டன் வரவேற்றார் தலைமை ஆசிரியை இ.அன்பு மேரி ஆண்டறிக்கை வாசித்தார். நிறைவாக தற்காலிக ஆசிரியர் எஸ்.மணிமொழி நன்றி கூறினார். ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில், திரளான மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story