நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர் சாதனை

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர் சாதனை

  சாக்கோட்டை அருகே கமலை கிராமத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ரவி நீட் தேர்வில் 597 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

சாக்கோட்டை அருகே கமலை கிராமத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ரவி நீட் தேர்வில் 597 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே உள்ள கமலை கிராமத்தை சேர்ந்த உடையப்பன் மகன் ரவி (வயது 18). பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன் மூலம் மாணவர் ரவி அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவர் ரவி கூறுகையில், எனது தாய்க்கு கேன்சர் இருப்பது கூட தெரியாமல் அவரை பறிகொடுத்தேன். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்க ஆரம்பித்து வெற்றி பெற்றுள்ளேன் என தெரிவித்தார்

Tags

Next Story