அரசு பள்ளி மாணவன் மூன்றாம் இடத்தில் வெற்றி

அரசு பள்ளி மாணவன் மூன்றாம் இடத்தில் வெற்றி

மாநில அளவிலான பேச்சு போட்டியில் சங்ககிரி அரசு பள்ளி மாணவன் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றார்

சங்ககிரி அரசு பள்ளி மாணவன் பேச்சு போட்டியில் மூன்றாம் இடத்தில் வெற்றி
மாநில அளவிலான அரசு பள்ளிகளுக்கான கலைத்திருவிழா பேச்சுப் போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் 3ம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி வேலூர் மாவட்டம், ஓட்டேரியில் உள்ள செவன்த் டே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற 38 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் பெ.த. சங்கமேஸ்வரன் 3வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜன், உதவி தலைமையாசிரியர் சக்திவேல், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Tags

Next Story