கிளாம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

கிளாம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு  மிதிவண்டி  வழங்கல்
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
கிளாம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வழங்கினார்.

இவ்விழாவில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறாமுதன், காட்டாங்குளத்தூர் ஊராட்சி மன்ற குழு தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் ,துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ,பள்ளி தலைமை ஆசிரியர் ,பள்ளி ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story