வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது

வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது

 பெண்ணின் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது

நித்திரவிளை அருகே வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது.
குமரிமாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் யோகன்னான் மனைவி அபிலா (28) மற்றும் 7 வயது குழந்தையுடன் ஊரில் வசித்து வருகிறார். யோகன்னான் அந்தமானில் வேலை செய்கிறார். அபிலா புதிதாக ஒரு வாஷிங் மெஷின் வாங்கி உள்ளார். இதை இயக்கத் தெரியாதால் பக்கத்து வீட்டில் வசிக்கும் எம் காம் பட்டதாரியான நிஷாந்த் (25) என்பவரிடம் வாஷிங் மெஷின் ஆன் செய்து தர கேட்டுள்ளார். நேற்று மாலை அபிலாவின் வீட்டிற்கு சென்ற நிஷாந்த் திடீரென அபிலாவை பிடித்து தள்ளி போட்டு, வாயை பொத்தி கழுத்தை கையால் இறுக்கி உள்ளான். அதிர்ச்சி அடைந்த அபிலா நிஷாந்த் கையை தட்டி விட்டு வீட்டுக்கு வெளியே ஓட முயன்றுள்ளார். அப்போது மீண்டும் அபிலாவின் தலை முடியை பிடித்து கீழே தள்ளி போட்டு, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளான். அபிலா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வர அவர்களையும் பார்த்து கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு நிஷாந் தப்பி ஓடிள்ளார்.சம்பவம் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் நிஷாந்தை சுற்றி வளைத்து புடித்து, நித்திரவிளை போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த அபிலா நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நித்திரவிளை இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் வழக்கு பதிவு செய்து, நிஷாந்தை கைது செய்தனர்.

Tags

Next Story