மயிலாடுதுறை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய பட்டதாரி கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய பட்டதாரி கைது

கைது செய்யப்பட்ட வாலிபர்

மயிலாடுதுறை அருகே அகர மணக்குடி பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய பாலிடெக்னிக் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .இது குறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொழுது ஒன்றுமில்லை என்று மறைத்துள்ளார் பிறகு விசாரிக்கையில் 3 1/2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜிற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் அச்சிறுமியை விசாரணை செய்து இது குறித்த புகாரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு சுப்ரியாவிடம் அளித்தார்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாபாய் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை அருகே உள்ள அகர மணக்குடி பகுதியை சேர்ந்த ராசு மகன் சிவஜோதி( 20) என்பவர் கடந்த ஓராண்டாக சிறுமியை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கோவில் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்தது. இருந்தால் அந்த சிறுமி 3 1/2 மாதம் கர்ப்பம் என கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சிவ ஜோதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர் . இவர் இரண்டு ஆண்டு பாலிடெக்னில் படித்து பட்டம் பெற்றவராவார்.

Tags

Next Story