பட்டதாரி வாலிபர் மர்ம சாவு

பட்டதாரி வாலிபர் மர்ம சாவு

பட்டதாரி வாலிபர் மரணம் 

இரவு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு
திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, இவரது மகன் சிபிராஜ். டிப்ளமோ பட்டாபிரணிவர் நேற்று முன்தினம் இரவு பால் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினார். பின்னர் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் சிபிராஜை தட்டி எழுப்பு முயன்ற போது பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு சிபிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சிபிராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது தெரிய வந்தது. போலீஸ் தரப்பில் கேட்டபோது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிபிராஜின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறினர் பாலம் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story