தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் அடுத்த செய்யூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியான லயோலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் வகுப்பான எல். கே. ஜி , யு. கே. ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது , மாணவர்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்த உற்சாகமாக சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கல்வியாளர் டாக்டர் S. கிரேசி, ஜியாஸ் IAS, IPS அகாடமி இயக்குநர் டாக்டர் P. லியோ, டோம்னிக் பள்ளியின் இயக்குநர் மற்றும் தாளாளர் டாக்டர் P. லியோ மரிய அந்தோணி மற்றும் பள்ளியின் இயக்குநர்கள் P. லியோ கிராசியஸ், P. லியோ பர்னபா ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பட்டமளிப்பு வழங்கினர்.. இந்த விழாவில் பெற்றோர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர், அனைவரையும் பள்ளியின் துணை முதல்வர் ஆண்டனி ஆரோக்கிய ராணி வரவேற்றார்.

Tags

Next Story