கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காவேரிப்பாக்கம் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

காவேரிப்பாக்கம் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் சேகர், பொருளாளர் சுந்தரம், நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் கலந்துகொண்டு 350 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து பட்டம் வாங்குவதற்கும், வாழ்க்கையின் பல நிலைகளில் முன்னேறுவதற்கும் அவரவர் பெற்றோர்களே காரணம். துன்பம் வந்த போது கலங்காமல் இருந்து தெளிவான முடிவெடுப்பவர்களே சிறந்து விளங்குவார்கள்.

கல்வியுடன் கூடிய சமூகப் பொறுப்புணர்வு பெற்று முழு மனிதனாக கல்லூரியை விட்டுச்செல்ல வேண்டும் என்றார்.இதில் பேராசிரியர்கள் ரம்யா, லாரன்சியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story