விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கிராம சபை கூட்டம் 

குடியரசு தினத்தன்று 688 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் வரு கிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25-ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித்திட்டம் தயாரித்தல், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவை குறித்து கிராம சபையில் விவாதிக்கப்படுகிறது, எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்குமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story