சிறுவஞ்சிபட்டு : கிராம சபை கூட்டம்

சிறுவஞ்சிபட்டு : கிராம சபை கூட்டம்

கிராமசபை கூட்டம்

40 லட்சம் மதிப்பில் புதிய நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், சிறுவஞ்சிபட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி தினகரன் தலைமையில் நடைபெற்றது. வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி பங்கேற்று உரையாற்றினார்.

கிராம மக்கள் சாலை வசதி,பஸ் வசதி, மருத்துவ துறையினர் மருந்துகள் நேரடியாக வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர். சாலை வசதி, குடிநீர் தேவையை, பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 40 லட்சம் மதிப்பில் புதிய நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கார்த்திகேயன், செந்தில், துரைசாமி வெம்பாக்கம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story