மயிலாடுதுறை அருகே கிராம சபை - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே கிராம சபை - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை அருகே பரசலூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட அட்சியர் மகாபாரதி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர்; ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்திற் கீழ் பெண்குழந்தைகளுக்கு மரக்கன்றுகள், வேளாண்மைத்துறை சார்பில் தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். தொடர்ந்து பெண் குழந்தைகள் கற்பிப்போம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா, உதவி இயக்குனர் மஞ்சளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்த கொண்டனர்.

Tags

Next Story