தாத்தா இரட்டைமலை சீனிவாசன் உருவத்திறப்பு விழா

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் உருவத்திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

அச்சரப்பாக்கத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு 2.20 கோடி மதிப்பீட்டில் முழு உருவ சிலை உடன் நினைவு மண்டபத்தை இன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம் திறக்கப்பட்டது..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கத்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முழு உருவ சிலை உடன் கூடிய நினைவு மண்டபம் 2.20 கோடி மதிப்பீட்டில் 4300 சதுர அடியில் புதியதாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கட்டப்பட்டது.

முழு உருவ வெங்கல சிலையுடன் கூடிய இந்த நினைவு மண்டபம் திறப்பு விழாவை தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் நந்தினி, செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story