உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியம்...!

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க மானியம்...!

மாவட்ட ஆட்சியர் 

உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் தஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உடற்பயிற்சி (Physiotherapy Clinic) நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்பட்டு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) அமைத்தும் தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees ) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும் உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு

முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

உடற் பயிற்சி சிகிச்சை (Physiotherapy) பயிற்சியில் பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத் தொழிலுக்கு ரூ.6.00 இலட்சம் திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கு 35% அல்லது அதிக பட்சம் ரூ. 2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் நாகப்பட்டினம்,

தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், தொலைபேசி எண். 04365-250305 மற்றும் அலைபேசி எண் 9445023466 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அறை எண் 321 மற்றும் 327 தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story