அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் 

தஞ்சை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 68 பயனாளிகளுக்கு ரூ.3.88 கோடி மானியம்  வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 68 நபர்களுக்கு ரூ.3 கோடியே 88 லட்சத்து 95 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில் துறையில் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பெயரில், தொழில் முன்னோடிகள் திட்டம் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும்.

அரசுவேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவில் மட்டும் இருப்பதை மாற்றி தொழில் முனைவோர்களாக மாற்றுவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பளித்து அச்சமுதாய மக்களை முன்னேற்றம் காண இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு, மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இணைய வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுத்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் பத்து நாட்கள் தொழில்முனைவு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் வழங்கப்பட்டு 1,303 தொழில் முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் 288 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 68 நபர்களுக்கு ரூபாய் 3 கோடியே 88 இலட்சத்து 95 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் பயனடைந்த தொழில் முனைவோர் செ.ராஜசேகரன் தெரிவித்ததாவது, நான் தஞ்சாவூர் பகுதியில் வசித்து வருகிறேன். ந தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 1 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 42 இலட்சத்துடன் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீல் அலைன்மென்ட் - வாட்டர் சர்வீஸ் ஒன்றினை தொடங்கி சுயதொழில் புரிந்து வருகின்றேன். சுயதொழில் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவாகும். இத்தொழிலின் மூலம் சுமார் ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் மாதாந்திர வருமானம் ஈட்டுகிறேன்.

8 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்னால் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த சிறந்த திட்டத்தின் மூலம் எனக்கு சுயதொழில் செய்ய வாய்ப்பளித்த தமிழகஅரசு மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார். இவ்வாறு மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகத்தான திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Tags

Next Story