சாலை பணியை முடிக்க வலியுறுத்தி ஜல்லி நிரப்பும் போராட்டம்

சாலை பணியை முடிக்க வலியுறுத்தி ஜல்லி நிரப்பும் போராட்டம்

ஜல்லி நிரப்பும் போராட்டம்

கடலூரில் சாலை பணியை முடிக்க வலியுறுத்தி ஜல்லி நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு இடையிலான 65 கி. மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள், ஏழு ஆண்டுகளாகியும் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜல்லி நிரப்பும் போராட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story