கிராவல் மண் கடத்தியவர் கைது - லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்தியவர் கைது -  லாரி பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி 

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமான வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அந்த டிப்பர் லாரியில் அரசின் அனுமதியின்றி ஐந்தரை யூனிட் கிராவல் மண் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அரசின் அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய காரைக்குடி கோபாலபுர பகுதியை சேர்ந்த காளிதாஸ் 31 என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story