மயான சாலையை சீர் செய்து தர வேண்டும் - வாலிபர் சங்கம் கோரிக்கை

மயான சாலையை சீர் செய்து தர வேண்டும் - வாலிபர் சங்கம் கோரிக்கை
புதர் மண்டிக் கிடக்கும் மயானச் சாலை
பாபநாசம் அருகே வடபாதி உடையார் கோவில் மயானச் சாலையை சீர் செய்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, 88 - வடபாதி உடையார் கோவில் கீழத்தெருவில் அமைந்துள்ள மயானச் சாலையில் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. பராமரிப்பின்றி ஒத்தையடிப் பாதையாக மாறி விட்டது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும், முள் செடிகள் படர்ந்து கிடப்பதால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, இந்தச் சாலையில் உள்ள புல், புதர்களை அகற்றி, மயானச் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags

Next Story