சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு கிரீன் பந்தல்

பெரம்பலூரில் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு கிரீன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு கிரீன் பந்தல்... கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வெளியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவில் உள்ள சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கிரீன் பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர், இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும்போது சிறிது நேரம் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். இச்செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story