வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்: முதுமலை கள இயக்குனர் துவக்கி வைப்பு

வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம்: முதுமலை கள இயக்குனர் துவக்கி வைப்பு
யானைகளுக்கு பசுதீவனம் வழங்கல்
வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் பசுந்தீவனம் வழங்கும் திட்டத்தை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை தெப்பக்காடு முகாமில் 25-ற்க்கும் மேற்ப்பட்ட வர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு உணவகாக வனப்பகுதிகுள் யானை அழைத்து சென்று மர கிளைகளை வெட்டி வருவது வழக்கம்.

இந்நிலையில் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவனம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் யானை பாகன்கள் மரங்களில் உள்ள இலை, தலைகளை வெட்ட மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதன் மூலம் வனங்களில் உள்ள மரங்கள் பாதுகாக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்

Tags

Next Story