கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம்

குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கள்ளக்குறிச்சி எஸ் பி அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

கள்ளககுறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான போலீசாரின் நடவடிக்கை குறித்த குறைதீர்ப்புக் கூட்டம் நடந்தது. எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது போலீசாரின் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திற்கு ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால் தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இதில் காவல் நிலையங்களில் முறையான தீர்வு கிடைக்காத 11 மனுக்களில் 9 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story