குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் 15 மனுக்கள் மற்றும் க்காவல்துறையினரின் 20 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story