பொதுமக்கள், காவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கான வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். தொடர்ந்து காவலர்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story