காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம்

குறைத்தீர் கூட்டம் 

பென்னாகரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காவல்துறை சார்பில் பொதுமக்களின் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் பென்னாகரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை ஒப்படைத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P. இளங்கோவன், பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P. மகாலட்சுமி பென்னாகரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பொதுமக்களிடம் தங்களது பிரச்சனைகள் குறித்த மனுவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Tags

Next Story