திருவாரூரில் நவம்பர்.2 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

திருவாரூரில் நவம்பர்.2 ல்  மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் நவம்பர் 2ம் தேதி திருவாரூரில் நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர் அவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்

Tags

Next Story