முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் ஜன.30 ல் நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைப்பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் (D.D.C Hall-ல்) வருகின்ற 30.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் / படைவீரர் / சார்ந்தோர், 30.01.2024 அன்று முற்பகல் 09.00 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைபுரிந்து, தங்களது குறைகளை இரட்டை பிரதிகளாக வழங்கி, நிவர்த்தி செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story