முன்னாள் படை வீரர்களுக்கு குறைகேட்பு கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு குறைகேட்பு கூட்டம்

முன்னாள் படைவீரர் குறைத்தீர் கூட்டம்

வருகின்ற 31ம் தேதி கள்ளகுறிச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 31-ம் தேதி நடக்கிறது. கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 11.30 மணிக்கு நடக்கிறது.

இக்கூட்டத்தில் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கின்றனர். சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இதில் மனு அளிக்க உள்ளவர்கள் தங்களின் கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி அடையாள அட்டை நகலுடன் இரு பிரதிகளை கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story