பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள்,விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள்,விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பைல் படம்

பட்டுக்கோட்டையில் துணை ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப்.22 ஆம் தேதி நடைபெறவுள்ளது

பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூறி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை உட்கோட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story