நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (நவ.2) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற வுள்ளது. இதுகுறித்து செயற் பொறியாளர் எஸ்.என். கலைவேந்தன் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மு.நளினி நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், மின் நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு புறநகர், திருவையாறு நகரம், திருக்காட்டுப்பள்ளி நகரம், திருக்காட்டுப்பள்ளி புறநகர், நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின் நுகர்வோர் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

Tags

Next Story