ஆரணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஆரணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பைல் படம் 

ஆரணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செவ்வாய்க்கிழமை (பிப்.27) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அளவில் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.27) காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.பழனிராஜு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story