பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள்  சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று பிப்ரவரி - 29ம் தேதி நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி - 29ம் தேதியன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் கற்பகம், தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வரும் பிப்ரவரி - 29ம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவணம் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story