காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறை தீர்வு கூட்டம்

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறை தீர்வு கூட்டம்
X

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறை தீர்வு கூட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங்மீனா தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். இதில் போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்கள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்று மனு அளித்தனர். அதில் 10 மனுக்கள் பெறப்பட்டு 8 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 2 மனுதாரரின் குறைகளை கேட்டறிந்து, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக 33 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

Tags

Next Story