கிரிவலம்

கிரிவலம்

பவுர்ணமியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி மலை கிரிவலம் நடந்தது.  

பவுர்ணமியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி மலை கிரிவலம் நடந்தது.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் , விருப்பாச்சி தலையூற்று திருநல்காசி மிஷன் சார்பில் பவுர்ணமியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் ஸ்ரீ குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி மலை கிரிவல துவக்க விழா நடந்தது.ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் முருகனின் வேலுக்கு பூஜை செய்து நடை பயணமாக புறப்பட்டு குழந்தை வேலப்பர் கோயிலை அடைந்து அங்கு குழந்தை வடிவில் அருள்பாலிக்கும் முருகனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் குழந்தை வேலப்பர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.விக்னேஷ், மாவட்ட செயலாளர் எஸ்.கே.ரவிக்குமார் செய்திருந்தனர்.

Tags

Next Story