துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் மாவட்டம் துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி விஷ்ணு தோப்பு பகுதியில் 40 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர், 3 ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் ,ஒன்றிய குழு துணைத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story