நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

நிழற்குடை அமைக்க அடிக்கல்

மூக்குப்பீறியில் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பணி நடைபெறவுள்ளது. விழாவில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கிவைத்தாா். மூக்குப்பீறி ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தலைமை வகித்தாா். சேகரகுரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தாா். ஊராட்சி துணைத் தலைவா் தனசிங், உறுப்பினா் கலையரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக வா்த்தகா் அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி சோ்மனும் திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருசந்திரன், ஏரல் வட்டாட்சியா் கைலாசகுமாரசாமி, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கியம்லீலா, மேலஆத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் சோபியா, ஆழ்வாா்திருநகரி ஒன்றியப் பொறியாளா் வெள்ளப்பாண்டியன், முன்னாள் நாசரேத் பேரூராட்சித் தலைவா் ரவி செல்வக்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் அருண்சாமுவேல், மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழகச் செயலா் ஐஜினஸ்குமாா், பேரூராட்சி கவுன்சிலா்கள் சாமுவேல், அதிசயமணி, ஜேம்ஸ், ஊராட்சி உறுப்பினா்கள் கிரேஸ், பிச்சைமணி, அந்தோணி கிறிஸ்டி, பாலசுந்தா் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் ஸ்டெல்லா நன்றி கூறினாா்.

Tags

Next Story