ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனைக்கான கால்கோள் விழா

ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனைக்கான கால்கோள் விழா
முகூர்த்த கால் நடும் விழா 
ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனைக்கான கால்கோள் விழா நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு , திமுக , அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் என அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிமனைக்கான கால்க்கோள் விழா நடைபெற்றது.

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் தேர்தல் பணிமனைக்கான கால்கோள் விழா நடைபெற்றது.இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி்பொறுப்பாளரும் ,

முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் , வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் , மாவட்ட செயலாளர் கே.வீ்.ராமலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் , கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story