சேலம் மாவட்டத்தில் 37 மையங்களில் குரூப்-1 தேர்வு !

சேலம் மாவட்டத்தில் 37 மையங்களில் குரூப்-1 தேர்வு !

கலெக்டர் பிருந்தாதேவி 

சேலம் மாவட்டத்தில் 37 மையங்களில் குரூப்-1 தேர்வு நாளை நடக்கிறது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

அன்றைய தினம் சேலம் டவுன், சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட 37 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 47 தேர்வுக் கூடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையத்துக்கு நாளை காலை 9 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வருகை புரியும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story