மைய நூலகத்தில் நாளை குரூப் 4 மாதிரி தேர்வு

மைய நூலகத்தில் நாளை குரூப் 4 மாதிரி தேர்வு

மாவட்ட மைய நூலகம் 

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை குரூப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெறுகிறது
திருச்சி மாவட்டம் மைய நூலகம், என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி மற்றும் பீனிக்ஸ் ரோட்டரி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை (19) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை மாவட்ட மைய நூலகத்தில். தேர்வில் ஏழாம் வகுப்பு அறிவியல் சமூக அறிவியல் செப்டம்பர் 2023 ஆம் மாத நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதம் ஏபி மற்றும் ஜிபி பாடப் பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெறும் மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்த ஆலோசனைகள் வழிமுறைகள். இந்த மாதிரி தேர்வுக்கு கட்டணம் ஏதுமில்லை எனவே டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 4 தேர்வுக்கு தயார் செய்பவர்கள் இத்தேரில் பங்கேற்ற பயனடையலாம் என திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்

Tags

Next Story