புஞ்சைபுளியம்பட்டியில் கார் மோதி காவலாளி உயிரிழப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் கார் மோதி காவலாளி உயிரிழப்பு

பைல் படம் 

புஞ்சைபுளியம்பட்டியில் கார் மோதிய விபத்தில் வடக்கு காந்திபுரத்தை சேர்ந்த காவலாளி உயிரிழந்தார்.

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வடக்கு காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் வயது 63 இவர் தனியார் நூர் பாலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடைய மகன் கோகுல் கௌதமுடன் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார் மோட்டார் சைக்கிளை கோகுல் கௌதம் ஓட்டினர் பின்னால் ரங்கராஜ் உட்கார்ந்து இருந்தார் மோட்டார் சைக்கிள் சென்ற போது ரங்கராஜ் அணிந்திருந்த தொப்பி ரோட்டில் விழுந்தது இதனால் அவர் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்கி துப்பி எடுக்கச் சென்றார்

அப்போது அந்த வழியாக வந்த கார் ரங்கராஜ் மீது எதிர்பாராத விதமாக மோதியது இதில் விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்த இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story