காவலர்களுக்கு சேமநலநிதி வழங்கல்

காவலர்களுக்கு சேமநலநிதி வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை செய்திருப்பேன் அதற்கான செலவு தொகையினை தமிழ்நாடு காவலர் சேமநல நிதி விருதுநகர் மாவட்ட குழு நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் சுமார் 82 காவலர்கள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 19 லட்சத்தி 76 ஆயிரத்து 229 ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகையை 82 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் வழங்கினார்.

Tags

Next Story