கூடலூர் : தடுப்புக் கம்பிகளை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூர் : தடுப்புக் கம்பிகளை  சேதப்படுத்திய காட்டு யானை

சிசிடிவியில் பதிவான யானை நடமாட்டம் 

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர்புறத்தில் உலா வந்த காட்டு யானை தடுப்புக் கம்பிகளை தும்பிக்கையால் சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் நகர்ப்புறங்களில் உலா வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் நகரில் பால் சொசைட்டி பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானை தடுப்புக் கம்பிகளை தும்பிக்கையால் இடித்து சேதப்படுத்தியது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story